Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை வருபவர்களுக்கு கெரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: கண்காணிப்பு அதிகாரி ஷண்முகம்

மே 08, 2020 12:16

கும்பகோணம்: சென்னை கோயம்பேடு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தஞ்சை வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு கெரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தஞ்சை மாவட்ட கொரோனா பணிகள் கண்காணிப்பு அதிகாரி ஷண்முகம் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம், இந்திய மருத்தவக் கழகம் மற்றும் நகராட்சி சார்பில் மருத்துவ பரிசோதனை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தஞ்சை மாவட்ட கொரோனா பணிகள் கண்காணிப்பு அதிகாரி ஷண்முகம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை மாவட்ட கொரோனா பணிகள் கண்காணிப்பு அதிகாரி ஷண்முகம், மாவட்ட எல்லைகளில் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதாகவும், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து, தஞ்சை வந்த 24 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து தஞ்சை வந்துள்ள ஆயிரத்து 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்